Saturday, March 24, 2012

நெருப்பின் மீது நிற்கும் போராட்டம்


நெருப்பின் மீது நிற்கும் போராட்டம்
மு. சிவலிங்கம்
“ரொம்ப சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்துப் போயிருவேன்னு தோணுது சார்... ” 
இப்படிச் சொன்னவர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர். மாணவர்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவரும் அரிதான ஒரு தலைமை ஆசிரியர் இவர். தென் சென்னைப் பகுதியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இவர் பணியாற்றிவருகிறார். பள்ளிக்கூட மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தனது பள்ளிக்கூட ஆசிரியர்களின் அலட்சிய மனோபாவம் குறித்து, மனம் வெதும்பி அவர் இப்படிச் சொன்னார். 
மாணவர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கையில், தன்னையே பலி கொடுத்துவிட்டார் ஒரு ஆசிரியை! இந்த உயிர்ப் பலிக்குப் பிறகுதான் மாணவர்களுக்கு நன்னெறி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றித் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. 
அரசு மற்றும் மாநகராட்சிக் கல்வித் துறையின் அதிகாரிகள் அனைவரும் மாணவ, மாணவியரின் மதிப்பெண், பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறித்து மட்டுமே ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் விவாதிக்கிறார்கள். உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் டாஸ்மாக் கடைகள், பாலியல் வெறியைக் கிளறிவிடும் ஊடகங்கள், விரசத்தை வாரி இறைக்கும் சினிமா சுவரொட்டிகள், ஏழைக் குடும்பங்களில் குடி போதையில் அம்மாவைக் கீழ்த்தரமாக, இழிவாகப் பேசி, உதைத்துக் கொடுமைப் படுத்தும் அப்பா, வசதியான குடும்பங்களில், செல்ல வாரிசுக்கு, 50 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து நம்பர் ஒன் மருத்துவ கல்லூரியில் சீட் ‘வாங்க’ பணம் வேண்டும் என்பதற்காக அதிக வருவாய் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கும் பெற்றோர்கள் என நெருக்கடியான சூழலில் இன்றைய விடலைப் பருவ மாணவ, மாணவியர் சிக்கித் தவிக்கின்றனர். இது பரிதாபமான நிலை மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான நிலவரமும்கூட என்பதை நானும் நீங்களும் உள்ள டங்கிய சமூகம் மறந்துவிட்டதன் விளைவுதான், சென்னை ஆசிரியை காவு வாங்கப்பட்ட அவலம்! 
தன் கடமையைச் செம்மையாக ஆற்றும் முனைப்புடன் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்கள் ஒவ்வொரு நொடியிலும் நெருப்பின் மீது நின்று கொண்டிருப்பதைப் போன்ற ஆபத்தான நிலையில் உள்ளனர். சில உதாரணங்களைப் பாருங்கள்:
வடபழனி அருகே உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பின் ஒரு பிரிவு மாணவ, மாணவியர் அந்த வகுப்பறையின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு, சினிமாப் பாடல்களை உரத்த சத்தத்துடன் பாடிக் கூச்சல் போட்டனர். அங்கு சென்ற தலைமையாசிரியர் அவர்களை கண்டித்துவிட்டு, பாடம் நடத்தத் தொடங்கினார். பெரும்பாலானோர் பாடத்தை கவனிக்கத் தயாராக இல்லை, கூச்சலையும் கைவிடவில்லை. பொறுமை இழந்த தலைமையாசிரியர், “கதவை மூடிவிட்டு என்ன செய்தீர்கள்? ஆடைகளை களைந்துவிட்டு நடனமாடினீர்களா?” என்ற பொருளில் கொச்சையாகக் கேட்டுவிட்டார். சற்று நேரத்தில், சில பெற்றோர்களும் அதே பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலரும் கும்பலாகச் சென்று, தலைமை ஆசிரியரை கண்டித்தார்கள். குறிப்பிட்ட வகுப்பறையில் என்ன நடந்தது என்பது குறித்து, தலைமை ஆசிரியர் விளக்கமளிக்க முயன்றபோது, ஆசிரியர்களின் கண்ணெதிரிலேயே அந்தக் கும்பலில் சிலர், அவரை அடித்தனர். தலைமை ஆசிரியர் மன்னிப்புக் கேட்ட பிறகே அவர்கள் அகன்றார்கள்.
அதே பள்ளியில் ஒரு நாள், மாடிப் படிக்கட்டில் ஒரு மாணவனும் மாணவியும் மிக நெருக்கமாக அமர்ந்துகொண்டு ரசாபாசமாக நடந்துகொண் டார்கள். அந்தப் பக்கம் சென்ற ஒரு ஆசிரியை அவர்கள் இருவரையும் கண்டித்தார். அடுத்த நாள் நான்கைந்து இளைஞர்கள் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்து அந்த ஆசிரியையைத் திட்ட ஆரம்பித்தார்கள். மிரட்டினார்கள். பீதியை வெளியே காட்டிக்கொள்ளாமல், தனது கணவரை மொபைலில் தொடர்புகொண்ட அவர், “போலீஸ கூட்டிட்டு உடனே எங்க ஸ்கூலுக்கு வாங்க” என்று சொன்னதும் அந்தக் கும்பல் இடத்தைக் காலி செய்தது. 
தென் சென்னைப் பகுதியில் உள்ள மற்றொரு சென்னை உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவன் ரவுடித்தனமாக நடந்துக்கொள்வான். ஒவ்வொரு மாணவியையும் மிரட்டி, அவனுக்குப் பிடித்த உணவு அயிட்டத்தை சமைத்துக்கொண்டு வரும்படி உத்தரவிடுவான். மிரட்டலுக்கு பயந்து மாணவிகள் அவன் கட்டளைளையை நிறைவேற்றுவார்கள். ஒரு மாணவி கொண்டு வந்த பிரியாணியை ருசித்து முடித்ததும், அருவருப்பான அவனது மற்றொரு விருப்பத்தை வெளியிட்டு அந்த டிபன்பாக்ஸில் கடிதம் எழுதிவைத்தான்.  
ஒரு ஆசிரியர் அந்த மாணவனைக் கண்டித்தார். அவன் வேறொருவர் மொபைலில் இருந்து அந்த ஆசிரியரிடமும் அவரது மனைவியிடமும் கீழ்த்தரமாக, ஆபாசமாகப் பேசி மிரட்டினான். தலைமையாசிரியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவனைக் கூப்பிட்டு மிக அன்புடன் விசாரித்தார். நான் அப்படிப் பேசவே இல்லை என்று சாதித்தான். தலைமை ஆசிரியர் அந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்டார். பிரச்சினை அதோடு முடிந்தது. 
இப்படிப்பட்ட அவலங்கள் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் செயல்படும் பெரும் பாலான பள்ளிகளின் யதார்த்தம். ஆசிரியர்கள் கையில்தான் இதற்கான தீர்வு உள்ளது. அடிப்படையான ஒழுங்கு, கட்டுப்பாடு நெறிகளை மாணவச் செல்வங்களின் மனதில் ஆழமாக வேரூன்றச் செய்ய வேண்டும். இத்தகைய முனைப்புடன் செயலாற்றும் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் பொறுப்பை நிர்வாகம் ஏற்க வேண்டும். அதே சமயம் ஆசிரியர்களின்  ஒவ்வொரு செயலும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும். 
ஆசிரியர்களின் முன்னுதாரணமான நடத்தை, மாணவர்களை நெறிப்படுத்தி அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களின் முனைப்பு, கடமையை ஆற்றும் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு ஆகிய மூன்றும் இருந்தால் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தைக் கணிசமாக உயர்த்தலாம்.
மு.சிவலிங்கம், ஊடகவியலாளர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி, வாழ்வியல் திறமைகளை மேம்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.
“ரொம்ப சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்துப் போயிருவேன்னு தோணுது சார்... ” 
இப்படிச் சொன்னவர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர். மாணவர்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவரும் அரிதான ஒரு தலைமை ஆசிரியர் இவர். தென் சென்னைப் பகுதியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இவர் பணியாற்றிவருகிறார். பள்ளிக்கூட மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தனது பள்ளிக்கூட ஆசிரியர்களின் அலட்சிய மனோபாவம் குறித்து, மனம் வெதும்பி அவர் இப்படிச் சொன்னார். 
மாணவர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கையில், தன்னையே பலி கொடுத்துவிட்டார் ஒரு ஆசிரியை! இந்த உயிர்ப் பலிக்குப் பிறகுதான் மாணவர்களுக்கு நன்னெறி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றித் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. 
அரசு மற்றும் மாநகராட்சிக் கல்வித் துறையின் அதிகாரிகள் அனைவரும் மாணவ, மாணவியரின் மதிப்பெண், பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறித்து மட்டுமே ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் விவாதிக்கிறார்கள். உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் டாஸ்மாக் கடைகள், பாலியல் வெறியைக் கிளறிவிடும் ஊடகங்கள், விரசத்தை வாரி இறைக்கும் சினிமா சுவரொட்டிகள், ஏழைக் குடும்பங்களில் குடி போதையில் அம்மாவைக் கீழ்த்தரமாக, இழிவாகப் பேசி, உதைத்துக் கொடுமைப் படுத்தும் அப்பா, வசதியான குடும்பங்களில், செல்ல வாரிசுக்கு, 50 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து நம்பர் ஒன் மருத்துவ கல்லூரியில் சீட் ‘வாங்க’ பணம் வேண்டும் என்பதற்காக அதிக வருவாய் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கும் பெற்றோர்கள் என நெருக்கடியான சூழலில் இன்றைய விடலைப் பருவ மாணவ, மாணவியர் சிக்கித் தவிக்கின்றனர். இது பரிதாபமான நிலை மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான நிலவரமும்கூட என்பதை நானும் நீங்களும் உள்ள டங்கிய சமூகம் மறந்துவிட்டதன் விளைவுதான், சென்னை ஆசிரியை காவு வாங்கப்பட்ட அவலம்! 

தன் கடமையைச் செம்மையாக ஆற்றும் முனைப்புடன் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்கள் ஒவ்வொரு நொடியிலும் நெருப்பின் மீது நின்று கொண்டிருப்பதைப் போன்ற ஆபத்தான நிலையில் உள்ளனர். சில உதாரணங்களைப் பாருங்கள்:
வடபழனி அருகே உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பின் ஒரு பிரிவு மாணவ, மாணவியர் அந்த வகுப்பறையின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு, சினிமாப் பாடல்களை உரத்த சத்தத்துடன் பாடிக் கூச்சல் போட்டனர். அங்கு சென்ற தலைமையாசிரியர் அவர்களை கண்டித்துவிட்டு, பாடம் நடத்தத் தொடங்கினார். பெரும்பாலானோர் பாடத்தை கவனிக்கத் தயாராக இல்லை, கூச்சலையும் கைவிடவில்லை. பொறுமை இழந்த தலைமையாசிரியர், “கதவை மூடிவிட்டு என்ன செய்தீர்கள்? ஆடைகளை களைந்துவிட்டு நடனமாடினீர்களா?” என்ற பொருளில் கொச்சையாகக் கேட்டுவிட்டார். சற்று நேரத்தில், சில பெற்றோர்களும் அதே பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலரும் கும்பலாகச் சென்று, தலைமை ஆசிரியரை கண்டித்தார்கள். குறிப்பிட்ட வகுப்பறையில் என்ன நடந்தது என்பது குறித்து, தலைமை ஆசிரியர் விளக்கமளிக்க முயன்றபோது, ஆசிரியர்களின் கண்ணெதிரிலேயே அந்தக் கும்பலில் சிலர், அவரை அடித்தனர். தலைமை ஆசிரியர் மன்னிப்புக் கேட்ட பிறகே அவர்கள் அகன்றார்கள்.
அதே பள்ளியில் ஒரு நாள், மாடிப் படிக்கட்டில் ஒரு மாணவனும் மாணவியும் மிக நெருக்கமாக அமர்ந்துகொண்டு ரசாபாசமாக நடந்துகொண் டார்கள். அந்தப் பக்கம் சென்ற ஒரு ஆசிரியை அவர்கள் இருவரையும் கண்டித்தார். அடுத்த நாள் நான்கைந்து இளைஞர்கள் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்து அந்த ஆசிரியையைத் திட்ட ஆரம்பித்தார்கள். மிரட்டினார்கள். பீதியை வெளியே காட்டிக்கொள்ளாமல், தனது கணவரை மொபைலில் தொடர்புகொண்ட அவர், “போலீஸ கூட்டிட்டு உடனே எங்க ஸ்கூலுக்கு வாங்க” என்று சொன்னதும் அந்தக் கும்பல் இடத்தைக் காலி செய்தது. 
தென் சென்னைப் பகுதியில் உள்ள மற்றொரு சென்னை உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவன் ரவுடித்தனமாக நடந்துக்கொள்வான். ஒவ்வொரு மாணவியையும் மிரட்டி, அவனுக்குப் பிடித்த உணவு அயிட்டத்தை சமைத்துக்கொண்டு வரும்படி உத்தரவிடுவான். மிரட்டலுக்கு பயந்து மாணவிகள் அவன் கட்டளைளையை நிறைவேற்றுவார்கள். ஒரு மாணவி கொண்டு வந்த பிரியாணியை ருசித்து முடித்ததும், அருவருப்பான அவனது மற்றொரு விருப்பத்தை வெளியிட்டு அந்த டிபன்பாக்ஸில் கடிதம் எழுதிவைத்தான்.  
ஒரு ஆசிரியர் அந்த மாணவனைக் கண்டித்தார். அவன் வேறொருவர் மொபைலில் இருந்து அந்த ஆசிரியரிடமும் அவரது மனைவியிடமும் கீழ்த்தரமாக, ஆபாசமாகப் பேசி மிரட்டினான். தலைமையாசிரியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவனைக் கூப்பிட்டு மிக அன்புடன் விசாரித்தார். நான் அப்படிப் பேசவே இல்லை என்று சாதித்தான். தலைமை ஆசிரியர் அந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்டார். பிரச்சினை அதோடு முடிந்தது. 
இப்படிப்பட்ட அவலங்கள் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் செயல்படும் பெரும் பாலான பள்ளிகளின் யதார்த்தம். ஆசிரியர்கள் கையில்தான் இதற்கான தீர்வு உள்ளது. அடிப்படையான ஒழுங்கு, கட்டுப்பாடு நெறிகளை மாணவச் செல்வங்களின் மனதில் ஆழமாக வேரூன்றச் செய்ய வேண்டும். இத்தகைய முனைப்புடன் செயலாற்றும் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் பொறுப்பை நிர்வாகம் ஏற்க வேண்டும். அதே சமயம் ஆசிரியர்களின்  ஒவ்வொரு செயலும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும். 
ஆசிரியர்களின் முன்னுதாரணமான நடத்தை, மாணவர்களை நெறிப்படுத்தி அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களின் முனைப்பு, கடமையை ஆற்றும் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு ஆகிய மூன்றும் இருந்தால் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தைக் கணிசமாக உயர்த்தலாம்.
மு.சிவலிங்கம், ஊடகவியலாளர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி, வாழ்வியல் திறமைகளை மேம்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.

Tuesday, October 4, 2011

கல்வி வள்ளல்கள்

                                    


சென்னை, கோடம்பாக்கம் புலியூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் மேம்பாட்டுக்காக நண்பர்கள் உதவியுடன் சில முயற்சிகளை கடந்த கல்வியாண்டில் தொடங்கினோம். மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அவர்களில் 7 பேர், நல்ல உள்ளங்களின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். சரஸ்வதி, சந்தியா ஆகிய மாணவியர் கோவூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.காம் பயில மூன்று ஆண்டுகளுக்கான செலவை நண்பர் திரு.பாலகணேஷ் ஏற்றுக் கொண்டார்

மாணவர் ஜக்கிரியாவுக்கு சென்னை, சூளைமேடு இஸ்லாமிய அமைப்பு ஒன்று நியு காலேஜில் பி.சி. இடம் வாங்கிக் கொடுத்து, கல்லூரிக் கட்டணத்தையும் செலுத்தியது. மாணவர் கிருஷ்ணமுர்த்தி. ஆவடி அருகே உள்ள செயின்ட் மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர பல நண்பர்கள் சேர்ந்து 23,000 ருபாய் நிதியுதவி வழங்கினார்கள். இந்த மாணவருக்காக சென்னை எம்.எம்.டி. காலனியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் 4.500 ரூபாய் வழங்கினார்கள். அந்தப் பள்ளியின் ஆசிரியை திருமதி. ஜெயந்தி அவரது பங்களிப்பாக 5,000 ரூபாய் வழங்கினார். மாணவர் தமிழரசன் கோடம்பாக்கம் சுந்தர்ராஜன் பொறியியல் கல்லூரியில் சேர 10,000 ரூபாயும் மாணவர் பாலமுருகன் சென்னை, சாலிக்கிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் சேர, 5,000 ரூபாயும் சென்னை, நுங்கம்பாக்கம் எஸ்ரோ அரிமா சங்கம் உதவுயுடன் வழங்கப்பட்டது. மாணவர் மூர்த்தி, ஆவடி எஸ்.ஏ பொறியியல் கல்லூரியில் பயில, நண்பர் திரு.சுரேஷ் (கோவை) 20,000 ரூபாய் வழங்கினார். இந்த கல்வி உதவித் திட்டம் குறித்து அறிந்த மாணவி வர்ஷிணி(மேற்கு மாம்பலம்), தனது தந்தையிடம் சொல்லி 1,500 ரூபாய் வழங்க வைத்தார். 


உதவி என்று கேட்காமலேயே உதவிக் கரம் நீட்டிய  சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அசாதாரண வள்ளல் மனம் கொண்ட இந்த மாணவியைப் போன்றோர்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..செயின்ட் மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் திரு.மித்ராவிடம் மாணவர் கிருஷ்ணமூர்த்தியின் ஏழ்மை நிலையை எடுத்துச் சொன்னதும் கல்லூரிக் கட்டணத்தை பாதியாயக் குறைத்துக்கொண்டார். நிதியுதவி வழங்கிய அனைவருமே இதற்காக காத்துக்கொண்டிருந்தவர்கள் போல ஆர்வத்துடன் உதவினார்கள். கல்வி உதவித்திட்டத்திற்காக பலரையும் சந்தித்தபோது, ஏழை மாணவ,மாணவியரின் உயர்கல்விக்காக உதவுவதை ஏராளமான நல்ல உள்ளங்கள் ஓசைப்படாமல் ஓர் இயக்கமாக செயல்படுத்தி வருவதை உணர முடிந்தது.


Sunday, January 9, 2011

படிப்பாளி யார்..? அறிவாளி யார்…?

பள்ளிக்கூடங்கள் விரட்டியடித்தாலும்,  தாமஸ் ஆல்வா எடிசன்களும் நந்தகுமார்களும் சாதனை சிகரங்களை எப்படி எட்டுகின்றனர்? அதே சமயத்தில் எத்தனை எத்தனை எடிசன்களை, நந்தகுமார்களை துளிர்விடும் பருவத்தில்  பள்ளிக்கூட சூழல் முன்னேறவிடாமல் முடக்கிப்  போட்டிருக்கும்? பள்ளிப் படிப்புக்கு லாயக்கற்ற சிறுவன் என தாமஸ் ஆல்வா எடிசன்  வெளியேற்றப்பட்டது போலவே சென்னை நந்தகுமாரும் ஆறாம் வகுப்பு பயின்றபோது  துரத்தியடிக்கப்பட்டார். கற்றல் குறைபாடு என்ற சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அதே நந்தகுமாருக்குள், பள்ளிக்கூடக் கதவுகள் மூடப்பட்ட பிறகு கற்றல் தாகம் ஊற்றெடுத்துப் பெருகியது

இந்த மாயம் நிகழ்ந்தது எப்படி?

சென்னை, எம்.எம்.டி.காலனியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் அவரே இந்த ரகசியத்தை வெளியிட்டார்.




குழந்தைத் தொழிலாளியாக கட்டட வேலை, கார் மற்றும் இரு சக்கர வாகனப் பட்டறை வேலை, லாட்டரி சீட்டு விற்பனை என பலதரப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, தன்னைச் சுற்றிலும் காணப்பட்ட எத்தனையோ விஷயங்கனைத்தான் பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கிறார்கள் என்ற ஆழமான உண்மை சட்டென்று புலப்பட்டது. பள்ளிக்கூடம் கற்றுத்தர மறுத்த பாடங்களை தானாகவே ஆர்வத்துடன் படித்தார். ப்ளஸ் டூ தேர்வில்  வெற்றி பெற்றும்  எந்தக் கல்லூரியும் இடம் கொடுக்கத் தயாராக இல்லை. ஒரு வழியாக வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கிய வகுப்பில் இடம் கிடைத்தது. இறுதியாண்டுத் தேர்வு எழுதிய மொத்தம் 60 மாணவர்களில் வெற்றி பெற்றவர் நந்தகுமார் மட்டுமே.  சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெறும்வரையில் தனக்குள் புதைந்து கிடைந்த அளவற்ற ஆற்றலை அடையாளம் காணமுடியாத நந்தகுமாருக்கு மட்டுமல்லாமல் , இந்த உலகுக்கும் அவரின் தனிப் பெருமையை அடையாளம் காட்டியது, யு.பி.எஸ்.சி தேர்வு. இதில் நாட்டிலேயே முதலிடத்தில்  வெற்றி பெற்றார்.  60 பக்கங்களில் எழுத வேண்டிய தேர்வை 20 பக்கங்களில்தான் எழுத முடிந்தது. வார்த்தைகளாக எழுத முடியாத விடைகளை வரைபடங்களாக, ஓவியங்களாக வடித்தார். மதிப்பெண்கள் குவிந்தன. இன்று நந்தகுமார், வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர்.

  “ எம்.ஏ. தேர்வு வரை நான் படிப்பாளியா..? இல்லையா..? என்பதை சோதித்துப் பார்க்கும் வினாக்கள் கேட்கப்பட்டன. யு.பி.எஸ்.சி. தேர்வில்தான் நான் அறிவாளியா என்பதை மதிப்பிடும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன.  அதனால்தான் அகில இந்திய அளவில் என்னால் வெற்றிபெற முடிந்தது” என்று தனது வெற்றி ரகசியத்தை வெளியிட்டார் இந்த சாதனை நாயகன்.

படிப்பாளியாக மாறாமல் அறிவாளியாக மாணவர்கள் உயர வேண்டும் என்பதை மையக் கருவாகக் கொண்டு  எளிமையாக, இயல்பாக அவர் பேசிய பாங்கு மாணவ மாணவியர் மனங்களில் ஆழமாகப் பதிந்தது. ஆசிரியர்களை ஆழமாக யோசிக்க வைத்தது.





Thursday, September 2, 2010

கருகித் துடிக்குதே பூமி

  ஞாயிற்றுக் கிழமை விடுமுறையைக் கொண்டாட்டத்துடன் அனுபவித்து மகிழ, முந்தைய நாள் மாலைப் பொழுதிலேயே சென்னை மாநகரம் உற்சாத்துடன் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது!  இரண்டாம் வகுப்பிலிருந்து கல்லுரியில் பயிலும் மாணவியர் வரையிலான நுற்றுக்கும் மேற்பட்டோர் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.



  உலகுக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஓர் ஆபத்தான பிரச்சினையிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும், அவற்றில் ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பு குறித்தும் உணர்த்துவதற்காக சமுக அக்கறையுடன் அவர்கள் அங்கு ஒன்றுதிரண்டிருந்தனர்
  இயற்கை வளங்களைப் பாழ்படுத்தி, நிலத்தை, நீரை, காற்றை மாசுபடுத்தி, வருங்கால சந்ததியினருக்கு பெரும் துரோகமிழைத்து வரும் மனித இனத்தைத் தண்டிக்க ஆக்ரோஷத்துடன்  இயற்கை  தயாராகிவிட்டதையும், பூமி வெப்பமடைதல் என்ற கடும் தாக்குதலை அது ஆரம்பித்துள்ளதையும் இந்த மாணவியர் கலைநிகழ்ச்சிகள் வாயிலாக கவலையுடன் விவரித்தனர்.
  கிளி வேடம் தரித்துவந்த ஒரு மாணவி எங்கும் பரவிவரும் நச்சுக்காற்றால் பறவை இனம் அழிந்துகொண்டிருப்பதை சோகத்துடன் சுட்டிக்காட்டி, பார்வையாளர்களை ஆழமாக சிந்திக்கவைத்தார்.' எங்கள் இனம் அழிக்கப்படுவதை நீங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் உங்கள் இனம் (மனித இனம்) அழிக்கப்பட்டுவிடும' என எச்சரிக்கை விடுத்தார்.

  இயற்கை ஏ.சிக்களான மரங்களை வெட்டிவிட்டு, செயற்கை ஏ.சி. வசதிகளை பெருக்கிக்கொண்டு, காற்று மண்டலத்தை மாசு படுத்துவதாலும், வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகையாலும், ஓசோன் படலத்தில் ஓட்டைகள் விழுந்து, சூரியனின் புற ஊதாக்கதிர்கள் தாக்குவதால் ஏற்படும் அபாயங்களைப் பார்வையாளர்கள் மனதில் ஆழமாகப் பதியும்படி  இந்த மாணவிகள் விவரித்தனர்.
  இவர்கள் தயாரித்திருந்த, பூமி வெப்பமடைதல் பேராபத்தை விளக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளில் ஒன்றில் இடம்பெற்றிருந்த, கரியமிலவாயு போர்வைக்குள்ளே கருகித் துடிக்குதே பூமி  என்ற வாசகத்தைப் படித்த யாரும்  பூமித்தாயின் மவுனமான கதறலை அன்று உணர்ந்திருப்பார்கள். இந்தக் கதறல் வேறு யார் காதுகளில் விழுந்ததோ.. விழவில்லையோ... தெரியாது. ஆனால் அந்த மாலைப் பொழுதில் அங்கு கூடியிருந்த மாணவிகளின் உள்ளங்களை பூமித்தாயின் அந்த மவுனக் கதறல் உலுக்கிவிட்டதை, சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்… பூமியைக் காப்போம்… என அந்த மாணவச் செல்வங்கள் அன்று எடுத்துக்கொண்ட உறுதிமொழி  அழுத்தமாக உணர்த்தியது.


  சென்னையில் செயல்பட்டவரும் தன்னார்வ அமைப்பான வாத்ஸல்யம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்த பல ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.

பிளாஸ்டிக் பொருள்கள் எப்படிப்பட்ட பேராபத்துகளை உணடாக்குகின்றன என்பதை பின்வரும் இணைப்பில் காணுங்கள்…
  


பூமியைக் காப்பதில் நமது பங்களிப்பு என்ன?
யோசிப்போம்…மாற்றங்கள் மலர வேண்டிய இடம், நம் உள்ளங்கள்தான்…

Saturday, August 14, 2010

கற்றபின் நின்றேன் அதற்குத் தக,,

இந்தியா 2020 தொலைநோக்குத் திட்டம் தந்து,  நாட்டுக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் பற்றி சென்னை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாணவ மாணவரிடையே ஒரு நாள் உரையாற்றினேன்.


புவி வெப்பமடைதல் பற்றிக் குறிப்பிட்டபோது  பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறித்தினேன். காலைச் சிற்றுண்டிக்காக அரைத்த மாவு வாங்கச் செல்லும் போது, கையோடு ஒரு பிளாஸ்டிக் பையை நான் எடுத்துச் செல்வதால் தினமும் ஒரு பிளாஸ்டிக் பையை நான் தவிர்ப்பதை பெருமிதத்துடன் சொன்னேன்.
சட்டென்று ஒரு மாணவி எழுந்தார். "வீட்டிலிருந்து ஒரு பாத்திரம் எடுத்துச் சென்றால் இரண்டு பைகளைத்  தவிர்க்கலாமே " என்றார்.


அந்த ஆசான் சொன்னதை வேத வாக்காக ஏற்றேன். அடுத்த நாளில் இருந்து  மாவு வாங்க பாத்திரத்தோடு செல்கிறேன்.  நான் மட்டுமல்ல, என் மகளும் மகனும், எம்.ஜி.ஆர் நகர் மாணவி கற்றுக் கொடுத்த பாடத்தை வழுவாது பின்பற்றி வருகிறோம். பள்ளிக்கூட மாணவ மாணவியர்மீது அப்துல் கலாம் வைத்துள்ள ஆழமான நம்பிக்கை எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்துகொண்டேன்.


எந்த விஷயமாக இருந்தாலும் மாற்றம் மலர வேண்டிய இடம் நம் ஒவ்வொருவரின் உள்ளம்தான். மாறட்டும் மனோபாவம்.. மலரட்டும் நல்வாழ்வு...


விழிவேள்வி வெளியீட்டு விழா காட்சிகள்... 

கண் மருத்துவத் துறையில் உலகிற்கே வழிகாட்டி,பார்வை இழப்பால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் புதிய விடியலை மலர வைக்கும் அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் வெங்கடசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு  விழிவேள்வி நூலை டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் மதுரையில் 2010 மே 20ஆம் நாள் வெளியிட்டார். அந்த விழாக் காட்சிகள் உங்கள் பார்வைக்காக...


 


வரவேற்புரை :  அரவிந்த் துணைத்  தலைவர் டாக்டர் நாச்சியார்

அப்துல் கலாமிடம் ஆசி பெறும் நூலாசிரியர் 
விழிவேள்வியை   அப்துல் கலாம் வெளியிட டாக்டர் எம்,ஜி,ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பெற்றுக்கொள்கிறார்.
”விழிவேள்வி படித்தேன்...என்னை மறந்தேன்...
”ஆஹா என்ன அருமையான புத்தகம்..”
சிறப்புரை: அப்துல் கலாம்,  அருகில் ஜி.நல்லகிருஷ்ணன், மயில்வாகனன், அரவிந்த் தலைவர் நம்பெருமாள்சாமி, ஜி.கிருஷ்ணன் மற்றும் மு.சிவலிங்கம்
நூல் அறிமுக உரை - மு . சிவலிங்கம்
நன்றி உரை : அரவிந்த் நிதித்  துறை இயக்குனர் ஜி . ஸ்ரீனிவாசன்
அப்துல் கலாமிடம்  கையெழுத்து  வேட்டை
                                                  
---------------------------------------------------------------------------------------------------------------
 பிரதிகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலை/அலைபேசி எண்கள்: 
சென்னை- 044 4263 4283/84  மதுரை - 90030 16718    திருநெல்வேலி:  97910 34167    திருச்சி : 97899 77824
கோவை: 97899 77845 சேலம் :  97910 32867 
-------------------------------------------------------------------------------------------------------------
டாடக்டர் வெங்கடசாமியின் வாழ்க்கைப் பயணம் பற்றிய விழிவேள்வி படித்தேன்... என்னை மறந்தேன்.. என்ன ஓர் அற்புதமான புத்தகம்! இவரின் வாழ்க்கை வரலாறு, இன்றைய இளைஞர்களை மாற்றும் ஒரு கிரியா ஊக்கியாக செயல்படும் என்பது திண்ணம். இந்த விழிவேள்வி நூல் நாட்டுக்கு ஒரு பெரும் பொக்கிஷம்!           

 டாக்டர் ஆ.பஜெ. அப்துல்கலாமின்
அணிந்துரையிலிருந்து

தமிழ் மண்ணில் தோன்றிய இந்தத் தன்னலமற்ற சூரியன் (டாக்டர் வெங்கடசாமி) தந்த ஒளிக்கதிரை உள்வாங்கி, ஊருக்கு ஒரு மருத்துவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் போதும். இந்த நாட்டின் ஒவ்வொரு கைப்பிடி மண்ணிலும் இறைவனின் தரிசனம் நிச்சயம்! 

டாக்டர் வெங்கடசாமியின் மறைவையொட்டி 
ஆனந்தவிகடன் வெளியிட்ட தலையங்கத்திலிருந்து...


மதுரை, தேனி, திருநெல்வேலி, கோவை, பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் விழிவேள்வி பிரதிகள் விற்பனைக்கு உள்ளன.